20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
2000-ம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடித்த டபுள்ஸ் சென்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. அதன்பிறகு குத்து, குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி உள்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். தற்போது கருவறை என்ற குறும்படத்துக்கு இசை அமைத்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார். 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா அளித்த பேட்டியில், ‛‛இந்த தேசிய விருது நான் இசையமைத்துள்ள கருவறை என்ற குறும்படத்திற்காக கிடைத்திருக்கிறது. இந்திய ஜனாதிபதி கையில் இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சியாகவும் பெருமையாக உள்ளது. இந்த விருதை இசையமைப்பாளரான எனது தந்தை தேவாவுக்கு அர்ப்பணிக்கிறேன். என் அப்பா ஏராளமான விருதுகள் வாங்கி இருக்கிறார். என்றாலும் நான் வாங்கியுள்ள இந்த விருதை அவர் சிறப்பாக நினைப்பார். மேலும், இதற்கு முன்பு கடந்த 20 ஆண்டுகளாக நான் இசையமைத்த எத்தனையோ படங்கள் என்னுடைய பெயர் போட்டு விருதுகளுக்கு சென்றுள்ளது. அப்போது விருது கிடைத்ததில்லை. ஆனால் இந்த படத்துக்கு இசையமைக்கும்போது விருது கிடைக்கும் என்ற எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் விருது கிடைத்திருக்கிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.