என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
விஜய்யின் லியோ படம் நாளை(அக்., 19) வெளியாக உள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் கூறுகையில், ‛‛லியோ படம் வரவே மாஸ்டர் தான் காரணம். படத்தில் கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய் அல்ல, அந்த கதாபாத்திரம். விஜய் பேசியதற்கு நானே பொறுப்பேற்கிறேன். படத்தில் அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. விஜய் படம் வெளியாகும்போது சிக்கல்கள் வருவது வழக்கம் தான். மாஸ்டர் படத்திற்கு கூட பிரச்னைகள் வந்தன.
ஸ்டார் நடிகர்களுடன் நான் சிக்கியதாக இல்லை. அதை எனக்கு கிடைத்த சுதந்திரமாக உணருகிறேன். லியோ எல்சியு-வா என்பது நாளை தெரிந்துவிடும். போதை பொருள் வேண்டாம் என்பதே எனது நோக்கம். அதனால் தான் படத்தில் அது தொடர்பான காட்சிகள் அதிகம் வருகின்றன. சில காட்சிகளை வன்முறை என்கிறார்கள். இதை நான் வன்முறை என்று சொல்ல மாட்டேன் ஆக் ஷன் என கூறுவேன். எனது படத்தில் பொதுவாகவே இரவு காட்சிகள் அதிகம் இருக்கும். எல்சியுவிற்கு நடிகர்களின் ஆதரவு தான் காரணம்
ரஜினி படம் எனது வழக்கமான கதையில் இருக்காது. வேறு ஒரு கதையில் இருக்கும். லியோவில் அரசியல் இல்லை. ஜெயிலர் வசூலை அது மிஞ்சுமா என தயாரிப்பாளர் தான் கவலைப்பட வேண்டும். நான் நல்ல படம் கொடுத்துள்ளேன். அனைத்து தியேட்டர் பிரச்னைகளும் இரவுக்குள் தீர்ந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.