கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

நடிகர் ரகுமான் திரையுலகில் நுழைந்து இன்னும் சில தினங்களில் 40 வருடங்களை தொடப் போகிறார். என்றும் மார்க்கண்டேயன் என்று இவரையும் சொல்லலாம் என்கிற விதமாக முப்பது வருடங்களுக்கு முன்பு புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போலவே இன்னும் இளமை துடிப்புடன் பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் ரகுமான்.
அந்த வகையில் தற்போது முதன் முதலாக பாலிவுட்டில் நுழைந்துள்ளதுடன் அமிதாப்பச்சனின் மகனாகவும் கண்பத் என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். இந்த படம் வரும் அக்டோபர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் மார்சியல் ஆர்ட்ஸ் கோச் ஆக நடிக்கிறார்.
தமிழில் அவர் ‛நிறங்கள் மூன்று, அஞ்சாமை' ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். இதில், நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களுடன் உருவாகியுள்ள அஞ்சாமை படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாகவும், வழக்கறிஞராகவும் என இரண்டு வித கதாபாத்திரங்களில் அதே சமயம் டபுள் ஆக்சன் ரோலாக இல்லாமல் ஒரே ஆளாக நடித்துள்ளார். நீட் தேர்வு விஷயத்தில் நீதியை நிலை நாட்டுவதற்கு தனது காக்கி யூனிபார்ம் தடையாக இருக்கிறது என்பதால் அந்த வேலையை ராஜினமா செய்துவிட்டு கருப்பு கவுன் மாட்டிக்கொண்டு வழக்கறிஞராக சட்டத்துடன் போராடும் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் ரகுமான்.