இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மாநகரம் படத்தில் இயக்குனரானவர் லோகேஷ் கனகராஜ். அதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இயக்கியவர் அடுத்தபடியாக ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில், ரஜினியை வைத்து தான் இயக்கப் போகும் படத்தின் கதை குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, ரஜினி 171வது படம் கண்டிப்பாக எல்.சி.யு.,வில் வராது. அது வேறு மாதிரி கதைகளம். அதோடு இதுவரை நான் இயக்கியதில் ஒரு புதுவிதமான படமாக இருக்கும்.
இந்த படத்தின் கதையை ரஜினியிடம் சொல்வதற்கு முன்பு விஜய்யிடம் தான் கூறினேன். அதைக் கேட்டதும் இந்த கதை மிக சிறப்பாக உள்ளது. எந்த ஒரு கதையையும் கேட்ட உடனேயே நான் இம்ப்ரஸ் ஆக மாட்டேன். ஆனால் இந்த கதை என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது என்று விஜய் கூறினார். அதன் பிறகு தான் ரஜினி இடத்தில் அந்த கதையை சொல்லுமாறு அனிருத் கூறினார். அன்று இரவே ரஜினியை சந்தித்து அந்த கதையை சொன்னேன். கதையைக் கேட்ட மறு நிமிடமே எனக்கு பிடித்து விட்டது. உடனே இந்த கதையை பண்ணலாம் என்று சொல்லிவிட்டார் ரஜினி.
அவர் அதிக ஆர்வம் காட்டியதினால்தான் அந்த படத்தை உடனே எடுக்க திட்டமிட்டேன் என்று கூறி இருக்கும் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து நான் இயக்கும் 171வது படம் கண்டிப்பாக ரஜினியின் கடைசி படமல்ல. அவருடைய லைன் அப் என்னவென்று எனக்கு தெரியும். ஆனால் அதை நான் சொல்ல மாட்டேன் என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.