பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்கள் சில வருடங்களிலேயே பிரிந்தனர். அதன்பின் இருவரும் அவர்களது பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை.
சமந்தா அவரது வலது இடுப்புப் பகுதியில் நாக சைதன்யாவின் செல்லப் பெயரான 'சாய்' என்று குறிக்கும் ஆங்கில எழுத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். அது பற்றி ஒரு பதிவிட்டும் அறிமுகப்படுத்தினார். அவரது முதுகுப் பக்கத்தில் அவரும், நாகசைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படமான 'ஏ மாய சேவவே' படத்தின் பெயரைக் குறிக்கும் வகையில் 'ஒய்எம்சி' என்ற ஆங்கில வார்த்தையை டாட்டூவாகப் போட்டுள்ளார். அடுத்து அவரது கையின் வலது மணிக்கட்டுப் பகுதியில் 'வைக்கிங் குறியீடு' என்று சொல்லப்படும் ஒரு டாட்டூவையும் வைத்துள்ளார். அதே போன்றதொரு டாட்டூவை நாகசைதன்யாவும் அவரது வலது மணிக்கட்டுப் பகுதியில் போட்டிருக்கிறார்.
சமந்தா நேற்று சில போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவரது கணவர் பெயரை டாட்டூவாகக் குத்தியிருந்தது காணப்படவில்லை. அந்த டாட்டூவை அழித்துவிட்டாரா அல்லது போட்டோஷாப் மூலம் அதை நீக்கிவிட்டாரா என்பது தெரியவில்லை. 'சாய்' என்பதை மட்டும் அழித்தாரா அல்லது நாகசைதன்யாவுடன் தொடர்புடைய மற்ற இரண்டு டாட்டூக்களையும் அழித்துவிட்டாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.
சமந்தாவின் அசத்தலான புகைப்படங்களுக்கு லைக் போட்ட ரசிகர்கள் சிலர் இந்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.