'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்கள் சில வருடங்களிலேயே பிரிந்தனர். அதன்பின் இருவரும் அவர்களது பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை.
சமந்தா அவரது வலது இடுப்புப் பகுதியில் நாக சைதன்யாவின் செல்லப் பெயரான 'சாய்' என்று குறிக்கும் ஆங்கில எழுத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். அது பற்றி ஒரு பதிவிட்டும் அறிமுகப்படுத்தினார். அவரது முதுகுப் பக்கத்தில் அவரும், நாகசைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படமான 'ஏ மாய சேவவே' படத்தின் பெயரைக் குறிக்கும் வகையில் 'ஒய்எம்சி' என்ற ஆங்கில வார்த்தையை டாட்டூவாகப் போட்டுள்ளார். அடுத்து அவரது கையின் வலது மணிக்கட்டுப் பகுதியில் 'வைக்கிங் குறியீடு' என்று சொல்லப்படும் ஒரு டாட்டூவையும் வைத்துள்ளார். அதே போன்றதொரு டாட்டூவை நாகசைதன்யாவும் அவரது வலது மணிக்கட்டுப் பகுதியில் போட்டிருக்கிறார்.
சமந்தா நேற்று சில போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவரது கணவர் பெயரை டாட்டூவாகக் குத்தியிருந்தது காணப்படவில்லை. அந்த டாட்டூவை அழித்துவிட்டாரா அல்லது போட்டோஷாப் மூலம் அதை நீக்கிவிட்டாரா என்பது தெரியவில்லை. 'சாய்' என்பதை மட்டும் அழித்தாரா அல்லது நாகசைதன்யாவுடன் தொடர்புடைய மற்ற இரண்டு டாட்டூக்களையும் அழித்துவிட்டாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.
சமந்தாவின் அசத்தலான புகைப்படங்களுக்கு லைக் போட்ட ரசிகர்கள் சிலர் இந்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.