ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்கள் சில வருடங்களிலேயே பிரிந்தனர். அதன்பின் இருவரும் அவர்களது பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை.
சமந்தா அவரது வலது இடுப்புப் பகுதியில் நாக சைதன்யாவின் செல்லப் பெயரான 'சாய்' என்று குறிக்கும் ஆங்கில எழுத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். அது பற்றி ஒரு பதிவிட்டும் அறிமுகப்படுத்தினார். அவரது முதுகுப் பக்கத்தில் அவரும், நாகசைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படமான 'ஏ மாய சேவவே' படத்தின் பெயரைக் குறிக்கும் வகையில் 'ஒய்எம்சி' என்ற ஆங்கில வார்த்தையை டாட்டூவாகப் போட்டுள்ளார். அடுத்து அவரது கையின் வலது மணிக்கட்டுப் பகுதியில் 'வைக்கிங் குறியீடு' என்று சொல்லப்படும் ஒரு டாட்டூவையும் வைத்துள்ளார். அதே போன்றதொரு டாட்டூவை நாகசைதன்யாவும் அவரது வலது மணிக்கட்டுப் பகுதியில் போட்டிருக்கிறார்.
சமந்தா நேற்று சில போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவரது கணவர் பெயரை டாட்டூவாகக் குத்தியிருந்தது காணப்படவில்லை. அந்த டாட்டூவை அழித்துவிட்டாரா அல்லது போட்டோஷாப் மூலம் அதை நீக்கிவிட்டாரா என்பது தெரியவில்லை. 'சாய்' என்பதை மட்டும் அழித்தாரா அல்லது நாகசைதன்யாவுடன் தொடர்புடைய மற்ற இரண்டு டாட்டூக்களையும் அழித்துவிட்டாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.
சமந்தாவின் அசத்தலான புகைப்படங்களுக்கு லைக் போட்ட ரசிகர்கள் சிலர் இந்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.