ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

சின்னத்திரை, பெரிய திரை நடிகர் ஈ.வி.கணேஷ் பாபு நடித்து, இயக்கி உள்ள படம் 'கட்டில்'. சிருஷ்டி டாங்கே நாயகியாக நடித்துள்ளார், விதார்த், கன்னிகா சினேகன், கீதா கைலாசம், செம்மலர் அன்னம், உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லெனின் திரைக்கதை எழுதி, எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
இந்த படம் தயாராகி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சில விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் படம் நவம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஈ.வி.கணேஷ் பாபு கூறியதாவது: ஒரு கட்டில் 3 தலைமுறைகளை தாண்டி எப்படி பயணிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. நமது பழமையையும், கலாசாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிற படம். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். அவர்தான் எனது குறும்படத்திற்கும் இசை அமைத்தார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே பல விருதுகளை வென்றுள்ள படம். இந்த படத்தில் நடித்தவர்கள் இப்போது பிசியான நடிகர்களாகி விட்டார்கள். கட்டில் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.