அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? |
சின்னத்திரை, பெரிய திரை நடிகர் ஈ.வி.கணேஷ் பாபு நடித்து, இயக்கி உள்ள படம் 'கட்டில்'. சிருஷ்டி டாங்கே நாயகியாக நடித்துள்ளார், விதார்த், கன்னிகா சினேகன், கீதா கைலாசம், செம்மலர் அன்னம், உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லெனின் திரைக்கதை எழுதி, எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
இந்த படம் தயாராகி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சில விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் படம் நவம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஈ.வி.கணேஷ் பாபு கூறியதாவது: ஒரு கட்டில் 3 தலைமுறைகளை தாண்டி எப்படி பயணிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. நமது பழமையையும், கலாசாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிற படம். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். அவர்தான் எனது குறும்படத்திற்கும் இசை அமைத்தார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே பல விருதுகளை வென்றுள்ள படம். இந்த படத்தில் நடித்தவர்கள் இப்போது பிசியான நடிகர்களாகி விட்டார்கள். கட்டில் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.