ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர் இ.வி.கணேஷ் பாபு. இவர் யமுனா என்ற படத்தை இயக்கினார். தற்போது இயக்கி உள்ள படம் கட்டில். இந்த படத்தில் அவரே நாயகனாக நடித்துள்ளார், நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இந்த படம் எடிட்டர் லெனின் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகளை கடந்து வரும் ஒரு கட்டில் பற்றிய கதை.
இந்த படத்தின் திரைக்கதையை கணேஷ்பாபு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்திற்கு, வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூலுக்கான விருதை வழங்கியது. சென்னையில் நடந்த விழாவில் நீதிபதி கிருஷ்ணன், கணேஷ் பாபுவிடம் விருதை வழங்கினார்.