நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தயாரிக்கும் படம் யசோதா. ஹரி-ஹரிஷ் இணைந்து இயக்குகிறார்கள். இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் நடிக்கின்றனர். மணி ஷர்மா இசையமைக்கிறார் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறியதாவது: இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் டப்பிங் பணிகள் தொடங்குகிறது. மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த பான்-இந்தியப் படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். படத்தை அனைத்து மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம். சமந்தா இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் அதிலும் , குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில், முழு அர்ப்பணிப்பையும் தந்து அசத்தியுள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.