அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் முதல் முறையாக இயக்கி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்துடன் தமிழில் 'இந்தியன் 2' படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்திற்காக கமல்ஹாசன் டப்பிங்கை ஆரம்பித்துவிட்டார் என்று படக்குழுவினர் வீடியோ வெளியிட்டார்கள். அந்த வீடியோவில் ஷங்கரும் உடனிருந்தார். இது பற்றி தெலுங்கு மீடியாக்கள் தவறான செய்தியை வெளியிட ஆரம்பித்தார்கள். 'இந்தியன் 2' டப்பிங்கில் ஷங்கர் இருந்தால், 'கேம் சேஞ்சர்' படத்தை தற்போது யார் இயக்கி வருகிறார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஷங்கர். “ஹைதராபாத்தில் நேற்று முதல் எங்களது 'கேம் சேஞ்சர்' படத்திற்காக உணர்ச்சிபூர்வமான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு அப்பா மறைந்ததை அடுத்து நேற்று அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அந்த சூழலிலும் நேற்றிரவு படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்து வதந்தி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.