உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு | அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி | ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித் | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் முதல் முறையாக இயக்கி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்துடன் தமிழில் 'இந்தியன் 2' படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்திற்காக கமல்ஹாசன் டப்பிங்கை ஆரம்பித்துவிட்டார் என்று படக்குழுவினர் வீடியோ வெளியிட்டார்கள். அந்த வீடியோவில் ஷங்கரும் உடனிருந்தார். இது பற்றி தெலுங்கு மீடியாக்கள் தவறான செய்தியை வெளியிட ஆரம்பித்தார்கள். 'இந்தியன் 2' டப்பிங்கில் ஷங்கர் இருந்தால், 'கேம் சேஞ்சர்' படத்தை தற்போது யார் இயக்கி வருகிறார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஷங்கர். “ஹைதராபாத்தில் நேற்று முதல் எங்களது 'கேம் சேஞ்சர்' படத்திற்காக உணர்ச்சிபூர்வமான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு அப்பா மறைந்ததை அடுத்து நேற்று அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அந்த சூழலிலும் நேற்றிரவு படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்து வதந்தி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.