வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அல்லு அர்ஜுன் கடந்த சில வருடங்களில் யூடியூப்பில் அவரது படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் பாலிவுட்டிலும் தெரிந்த முகமாக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது.
சமீபத்தில் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்கிற பெருமையும் அல்லு அர்ஜுனுக்கு சேர்ந்து கொண்டது. இந்த நிலையில் இன்னொரு சிறப்பம்சமாக அவரது மெழுகுசிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் விரைவில் இடம்பெறப் போகிறது. இந்த சிலையை செய்ய தேவைப்படும் அல்லு அர்ஜுனின் 200 விதமான புகைப்படங்கள் மற்றும் அளவுகள் ஆகியவை சமீபத்தில் சிலை வடிவமைப்பாளர்களால் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள அல்லு அர்ஜுன், "நான் சிறுவயதாக இருக்கும்போது இந்த மியூசியத்திற்கு வந்துள்ளேன். ஆனால் நானே இங்கே சிலையாக இடம் பெறப்போகிறேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை" என்று கூறியுள்ளார்.




