கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
பிரபல பின்னணி பாடகி சின்மயி பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல் முன்னணி கதாநாயகிகள் பலருக்கும் டப்பிங்கும் பேசி வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛மீ டூ' விவகாரம் மூலம் பாடலாசிரியர் வைரமுத்துவுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக இவருக்கு தமிழில் டப்பிங் பேச மறைமுக தடை விதிக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தது. இதனால் தெலுங்கில் மட்டுமே இவர் பணியாற்றும் சூழல் இருந்தது. இந்த நிலையில் அவர் மீது விதிக்கப்பட்ட மறைமுக தடையை உடைக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தான் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தில் திரிஷாவுக்காக சின்மயியை டப்பிங் பேச வைத்துள்ளார்.
இதுகுறித்த தகவலை தற்போது மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள சின்மயி, ‛‛திரிஷாவுக்காக தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் டப்பிங் பேசியுள்ளேன். இதுபோன்ற ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்ததற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருக்கு மில்லியன் தடவை நன்றியுடையவளாக இருப்பேன்'' என்று கூறியுள்ளார். சின்மயியின் இந்த பதிவுக்கு தன் பங்கிற்கு திரிஷாவும் நன்றி தெரிவித்துள்ளார்.