நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி | பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ் | பிளாஷ்பேக் : முதல் படத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு | விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் இரு வேடங்களில் நடிக்க, டைம் டிராவல் கதையாக வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிப் படமானது.
இப்படத்தின் டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே படம் வெற்றி பெறும் என்று படம் வெளியாவதற்கு முன்பே சொன்னார்கள். அது போலவே படமும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. விஷால் நடித்து இதுவரை வெளிவந்த எந்த ஒரு படமும் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை. அவர் நடித்து 2018ல் வெளிவந்த 'இரும்புத் திரை' படம் 60 கோடி வரை வசூலித்தது. அதுதான் அவரது படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம்.
இப்போது அந்த வசூலை 'மார்க் ஆண்டனி' முறியடித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம் 100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார். விஷாலின் முதல் 100 கோடி படமாக இந்தப் படம் அமையப் போகிறது.