பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' மற்றும் ஜீ தமிழ் சீரியலான 'றெக்க கட்டி பறக்குது மனசு' ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சமிரா ஷெரீப். பகல் நிலவு தொடரில் தன்னுடன் நடித்த சக நடிகரான சயத் அன்வரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியல் பக்கம் நடிக்க வராத சமீரா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது நல்லதொரு தாயாக குழந்தையை வளர்த்து வரும் சமீரா, உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். இதற்கிடையில் அவரை மீண்டும் நடிக்க சொல்லி ரசிகர்கள் வற்புறுத்தி வர, ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வேகத்தை பார்த்தால் இரண்டே மாதத்தில் பழைய சமீராவாக சீரியலில் கமிட்டாவார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.