நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள 'லியோ' படத்தின் இசை வெளியீடு செப்., 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென விழாவை ரத்து செய்தனர்.
போலி டிக்கெட்டுகள் விற்பனை, விஜய் மக்கள் இயக்கத்திற்காக அதிக டிக்கெட்டுகள் தேவை, இட நெருக்கடி, பாதுகாப்பு காரணங்கள், ஏஆர் ரஹ்மான் நடத்திய நிகழ்ச்சியின் தோல்வி என பல காரணங்களால் விழா ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் சிலர் அரசியல் காரணமாக விழா ரத்தானது என்றும் பேசி வருகிறார்கள். படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சில ஏரியாக்களில் வினியோகிக்கக் கேட்டதாகவும் அதைத் தர தயாரிப்பாளர் மறுத்ததாகவும் எனவேதான் விழாவுக்கு அனுமதி தரவில்லை என்றும் சிலர் அரசியல் நெருக்கடி என காரணம் சொல்கிறார்கள். இது அரசியல் குத்து.
அதே சமயம், உள் குத்து ஒன்று இருக்கிறதென்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 'லியோ' படத்தை 'எல்சியு' ஆக எடுக்க லோகேஷ் முயற்சித்தாராம். அதைப் பற்றித் தெரிய வந்ததும் இது தன்னுடைய படம் இதில் வேறு எந்த நடிகருக்கும் இடமில்லை என விஜய் கறாராகச் சொல்லிவிட்டாராம். அதனால் லோகேஷ் மிகவும் வருத்தப்பட்டாராம். அதன்பின் படத்தின் சில காட்சிகளை விஜய் மாற்றச் சொன்னதும் அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்தாராம். இதனால், படத்திற்கு வசனம் எழுதிய ரத்னகுமாரை வைத்து பல காட்சிகளை எடுத்தார்களாம்.
மேலும், 'லியோ' படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினிகாந்த்தின் 171வது படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதாலும் லோகேஷ் மீது கடுப்பில் உள்ளாராம் விஜய். இருவருக்குமான நெருக்கம் நிறையவே குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். 'லியோ' இசை வெளியீடு ரத்து குறித்து லோகேஷ் இதுவரையிலும் டுவிட்டர் தளத்தில் எந்தப் பதிவையும் பதிவிடாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் கோலிவுட்டில்.