Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வங்கி கணக்கு, சொத்து விபரம் தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

26 செப், 2023 - 10:04 IST
எழுத்தின் அளவு:
Actor-Vishal-filed-bank-account-and-property-details

சென்னை, உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பை தொடர்ந்து, வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விபரங்களை, நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.

'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள, 'விஷால் பிலிம்' பேக்டரி நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை 'லைகா' நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாக, விஷால் நிறுவனம் தெரிவித்தது.

ரூ.15 கோடி டிபாசிட்

இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட, விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில், படம் வெளியாகி விட்டதால், கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி,'உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில், 15 கோடி ரூபாய்க்கு பிக்சட் டிபாசிட்டை, விஷால் நிறுவனம் செலுத்த வேண்டும்' என, இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன், விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை, விஷால் நிறைவேற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2021 முதல் இப்போது வரைக்குமான, விஷாலின் வங்கி கணக்குகளின் விபரங்களையும், அவருக்கு சொந்தமான சொத்து விபரங்களையும் ஆவணங்களுடனும் தாக்கல் செய்ய, நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். அதன் பின்னும், வங்கி கணக்கு, சொத்து விபரங்கள் தாக்கல் செய்யப்படாததால், விஷால் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

முழுமையாக இல்லை
நீதிபதி முன் ஆஜரான விஷாலிடம், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது என, கேள்வி எழுப்பினார். 'நீதிமன்றத்தை விட பெரியவர் என நினைக்க வேண்டாம்' என்றும் கண்டிப்புடன் கூறினார். ஆவணங்களின் விபரங்களை அளிக்கவும், அவகாசம் வழங்கினார்.

இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, விஷால் தரப்பில், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஐ.டி.பி.ஐ., ஆக்சிஸ், பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் உள்ள கணக்கு விபரங்களும், அசையா சொத்துக்களின் விபரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, முழுமையான விபரங்களை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி பதில் மனு தாக்கல் செய்ய, லைகா தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. விசாரணையை, வரும் 29க்கு, நீதிபதி ஆஷா தள்ளி வைத்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நெல்சன் தயாரிப்பில் கவின்நெல்சன் தயாரிப்பில் கவின் துபாய் புறப்பட்டது 'விடாமுயற்சி' குழு : அஜித் எப்போது செல்கிறார்? துபாய் புறப்பட்டது 'விடாமுயற்சி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in