‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட் கட்டிடம் இந்தியாவின் புதிய அடையாளமாகி இருக்கிறது. சுமார் 862 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் தற்போது புதிய சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் இதை பார்த்து வருகிறார்கள்.
புதிய பார்லிமென்ட்டில் நடந்த முதல் கூட்டத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருக்கிறது. இதனால் பெண்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அரசும் பல்வேறு பெண்களின் அமைப்புகளை அழைத்து பார்லிமென்ட் கட்டடத்தை சுற்றிக் காட்டி வருகிறது. முன்னணி நடிகைகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
அந்த வகையில் நேற்று நடிகைகள் குஷ்பு, தமன்னா, லட்சுமி மஞ்சு, மெஹ்ரின், திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை சுற்றி பார்த்தனர். அதோடு பெண்கள் மசோதா தொடர்பாக நடந்த விவாதங்களையும் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து கேட்டனர்.
இதுகுறித்து தமன்னா கூறும்போது “இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என நான் நினைக்கிறேன். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, சாமானியர்களைக்கூட அரசியலுக்கு வர ஊக்குவிக்கும்” என்றார்.




