கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட் கட்டிடம் இந்தியாவின் புதிய அடையாளமாகி இருக்கிறது. சுமார் 862 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் தற்போது புதிய சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் இதை பார்த்து வருகிறார்கள்.
புதிய பார்லிமென்ட்டில் நடந்த முதல் கூட்டத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருக்கிறது. இதனால் பெண்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அரசும் பல்வேறு பெண்களின் அமைப்புகளை அழைத்து பார்லிமென்ட் கட்டடத்தை சுற்றிக் காட்டி வருகிறது. முன்னணி நடிகைகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
அந்த வகையில் நேற்று நடிகைகள் குஷ்பு, தமன்னா, லட்சுமி மஞ்சு, மெஹ்ரின், திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை சுற்றி பார்த்தனர். அதோடு பெண்கள் மசோதா தொடர்பாக நடந்த விவாதங்களையும் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து கேட்டனர்.
இதுகுறித்து தமன்னா கூறும்போது “இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என நான் நினைக்கிறேன். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, சாமானியர்களைக்கூட அரசியலுக்கு வர ஊக்குவிக்கும்” என்றார்.




