இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை மீனா சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில் அண்ணாத்த என்கிற படத்தில் மட்டும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மற்றபடி அவர் மலையாள திரையுலகில் முக்கியத்துவம் கொடுத்து செலக்டிவான படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் திரிஷ்யம் 2, புரோ டாடி ஆகிய படங்களில் நடித்த மீனா அதன் பிறகு தனது கணவரை இழந்த சோக நிகழ்வு காரணமாக சில மாதங்கள் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ள மீனா மலையாளத்தில் உருவாகி வரும் அனந்தபுரம் டைரீஸ் என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இதில் மிகுந்த பிரச்னைகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே வழக்கறிஞராக துடிக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மீனா. இப்படி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மீனா நடிப்பது இதுதான் முதல் முறை.
இந்த படத்தை ஜெய ஜோஸ் ராஜ் என்பவர் இயக்குகிறார். வழக்கறிஞர் கதை என்றாலும் இதில் ஒரு குறிப்பிட்ட பகுதி கதை கல்லூரியில் நடைபெறும் விதமாக படமாக்கப்பட்டு உள்ளது. இதில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். மேலும் நடிகர் மனோஜ் கே ஜெயன் இதில் இன்னொரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.