ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை | 'கில்லி' ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்குமா 'படையப்பா' ? | தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் |

நடிகை மீனா சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில் அண்ணாத்த என்கிற படத்தில் மட்டும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மற்றபடி அவர் மலையாள திரையுலகில் முக்கியத்துவம் கொடுத்து செலக்டிவான படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் திரிஷ்யம் 2, புரோ டாடி ஆகிய படங்களில் நடித்த மீனா அதன் பிறகு தனது கணவரை இழந்த சோக நிகழ்வு காரணமாக சில மாதங்கள் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ள மீனா மலையாளத்தில் உருவாகி வரும் அனந்தபுரம் டைரீஸ் என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இதில் மிகுந்த பிரச்னைகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே வழக்கறிஞராக துடிக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மீனா. இப்படி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மீனா நடிப்பது இதுதான் முதல் முறை.
இந்த படத்தை ஜெய ஜோஸ் ராஜ் என்பவர் இயக்குகிறார். வழக்கறிஞர் கதை என்றாலும் இதில் ஒரு குறிப்பிட்ட பகுதி கதை கல்லூரியில் நடைபெறும் விதமாக படமாக்கப்பட்டு உள்ளது. இதில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். மேலும் நடிகர் மனோஜ் கே ஜெயன் இதில் இன்னொரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.




