இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பல்லடம் : ''ஐம்பது வயது கடந்த ஆண்களுக்கு மனைவியே இரண்டாம் தாய்,'' என, பல்லடத்தில் நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்தார்.
பல்லடம் வனம் அமைப்பின் வனாலயம் அடிகளார் அரங்கில், நடிகர் சிவகுமாரின் 'குரல் 100 - திருக்குறள் உரை' நிகழ்ச்சி நேற்று நடந்தது. வனம் அமைப்பின் தலைவர் சுவாதி சின்னசாமி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்ரமணியம், பியோ தலைவர் சக்திவேல் மற்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
நடிகர் சிவகுமார் பேசியதாவது : கொங்கு தமிழ் பாரம்பரியத்தை நான் விட்டு சென்று 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், ஒருபோதும் என்னால் இவற்றை மறக்க முடியாது. ஏனெனில், இவையெல்லாம் எனது ரத்தத்தில் ஊறியவை. விநாயகர், முருகன், சிவன் என கடவுள்களை நாம் தான் உருவகப்படுத்தி உள்ளோம். படைப்பு கடவுளாக இருப்பவர்கள் தான் பெண்கள். ஏனெனில், இந்த உடலில் உள்ள கண், காது, மூக்கு, வாய் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்தவர்கள் தாயாக விளங்கும் பெண்கள் தான்.
உலகில், கணவனை இழந்து தனியாக வாழும் பெண்களை பார்க்கலாம். ஆனால், மனைவியை இழந்த, 50 ஆண்டு வாழ்பவர்கள் யாரும் இருக்க முடியாது. ஐம்பது வயது கடந்த அனைத்து ஆண்களுக்கும், அவரவர் மனைவி தான் இரண்டாம் தாய். எனது உயிர் போக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டால் அது எனது மனைவியின் மடியில் தான் போக வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட தாயை வணங்குங்கள். நான் எனது மனைவியை அப்படித்தான் வணங்கி வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.