தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் | அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய ஆடையில் மகள் குஷி | நிவின்பாலி - பிரணவை ஒன்றிணைத்த வினீத் சீனிவாசன் | நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவின் பிறந்தநாளில் பிரபாஸ் அளித்த பரிசு | நடிகை லேனாவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மத்தியில் குரல் கொடுத்த சுரேஷ்கோபி | பெங்களூருக்கு வந்த நானியை வரவேற்று உபசரித்த சிவராஜ்குமார் |
'கேஜிஎப் 2' படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டவர் கன்னட இயக்குனரா பிரசாந்த் நீல். அப்படத்தை அடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் படம் வெளியாகாது என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் விலை எதிர்பார்த்த விலைக்கு அமையவில்லை என்பதால்தான் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் எனச் சொன்னார்கள். இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றில் சர்வதேச அளவில் பிரபலமான இரண்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளதாம். அவற்றின் விலையால் மட்டுமே படத்தின் மொத்த பட்ஜெட்டும் வந்துவிட்டதாம். தியேட்டர் உரிமை, இதர உரிமைகள் ஆகியவை படத்திற்குக் கூடுதல் லாபம் என்கிறார்கள்.
இந்த முக்கிய சிக்கல்கள் தீர்ந்ததால் படத்தின் வெளியீடு பற்றி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.