கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் வெற்றியை பெற்றுள்ளது. இதில் கதாநாயகியாக நடித்து பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளார் நயன்தாரா. அதுமட்டுமல்ல இதில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதியின் வில்லத்தனமும் பாலிவுட்டில் பிரபலமாக பேசப்படுகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானின் பெண்கள் டீமில் ஒருவராக நடித்துள்ள ஆலியா குரேஷி என்பவர் விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜய்சேதுபதி பற்றி அவர் கூறும்போது, “விஜய்சேதுபதியை நான் ரொம்பவே நேசிக்கிறேன். அவரைப் பற்றி யாராவது தவறான வார்த்தைகள் சொன்னால் அவர்களுடன் சண்டையிட தயாராக இருக்கிறேன்.. அவர் ஒரு மென்மையான மனிதர்.. அவருடன் பேசும்போது ஒரு நடிகரிடமோ அல்லது மிகப்பெரிய நட்சத்திரத்திடமோ பேசுகிறோம் என்கிற உணர்வே தோன்றாது. அவருக்கென வசனம் சொல்லித் தந்து காட்சிகளை விளக்க ஒரு டீம் இருந்தாலும் கூட அவர் அதிலும் தன் பாணியில் சில விஷயங்களை சேர்த்துக் கொண்டு தனித்தன்மை காட்டக் கூடியவர். அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.