நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தில் இடம் பெற்ற 'நா ரெடிதான்' பாடலில் குடிப்பது, புகை பிடிப்பது பற்றிய 'போதை' வரிகள் இடம் பெற்றிருந்தன. அப்பாடல் வெளியான போதே அது குறித்து பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.
அப்பாடலில் “பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,” என்ற வரிகளும் “மில்லி உள்ள போனா போதும், கில்லி வெள்ல வருவான்டா,” என்ற வரிகளும், “பத்த வச்சி புகைய விட்டா பவர் கிக்கு,” என்ற வரிகள் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த லிரிக் வீடியோ முழுவதுமே விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளே இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்பாடலைத் தற்போது டிவியிலும், தியேட்டர்களிலும் திரையிடுவதற்காக சென்சாருக்காக விண்ணப்பித்திருந்தனர். சர்ச்சைக்குரிய அந்த போதை வரிகளை நீக்கி சென்சார் உத்தரவிட்டுள்ளது.
“பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,” என்ற வரிகளும் “மில்லி உள்ள போனா போதும், கில்லி வெள்ல வருவான்டா,” என்ற வரிகளும், “பத்த வச்சி புகைய விட்டா பவர் கிக்கு,” ஆகிய வரிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சிகளைக் குறைத்தும், குளோசப் காட்சிகளைக் குறைத்தும் உள்ளார்கள். எச்சரிக்கை வாசகங்களின் எழுத்து அளவை இன்னம் அதிகமாக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன் மூலம் இப்படி போதை, குடி, சிகரெட் ஆகியவற்றை வைத்து பாடல்கள்களை உருவாக்கும் இயக்குனர்கள் இனியாவது இவற்றைத் தவிர்ப்பார்கள் என எதிர்பார்ப்போம்.