சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது |

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். இந்த படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஜவான் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் ஷாரூக்கான், நடிகை நயன்தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். ஷாரூக்கான் தனது மகள் சுகானாவுடனும், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடனும் இந்த தரிசனத்தில் கலந்து கொண்டு உள்ளார்கள். நேற்று இரவு திருப்பதிக்கு சென்று அவர்கள் அங்கு தங்கி இருந்து இன்று காலை சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்துள்ளார்கள். குறிப்பாக, திருப்பதி கோயிலுக்கு தற்போது முதல் முறையாக சென்றுள்ள ஷாரூக்கான் வேஷ்டி - சட்டை அணிந்து சாமி தரிசனம் செய்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




