Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி குறித்த கருத்து : சீமானுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

29 ஆக, 2023 - 15:09 IST
எழுத்தின் அளவு:
Comment-on-Rajini:-Raghava-Lawrence-thanks-Seeman

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தபோது அவரை கடுமையாக எதிர்த்து வந்தவர்களில் நாம் தமிழர் கட்சியின் சீமானும் ஒருவர். என்றாலும் ரஜினி அரசியலுக்கு வராமல் பின்வாங்கிய பிறகு அவரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் பெற்றதை சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு விமர்சித்து வருகிறார்கள்.

இதுபற்றி சீமான் கூறுகையில், ‛‛அப்பர் சுவாமிகள் ஞானசம்பந்தர் என்ற சிறுவனின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். அதனால் ரஜினிக்கு என்ன விருப்பமோ அதை அவர் செய்கிறார். அவருக்கு பிடித்தமானவை அவரை செய்ய விடுங்கள். சுதந்திரமாக வாழ விடுங்கள். அவருக்கு தியானம் செய்வது, யோகிகளை வணங்குவது பிடித்திருக்கிறது. அதில் தவறு ஒன்றும் இல்லை. இதனால் எல்லாம் ஒரு மனிதன் சமூக குற்றவாளி ஆகிவிடுவானா? இதற்காகவெல்லாம் ரஜினியை விமர்சிக்க வேண்டுமா? அடிக்கடி இமயமலைக்கு செல்கிறார். அங்கு செல்வதால் தனது மனதுக்கு நிம்மதி கிடைப்பதாக நினைக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. ரஜினி காலில் விழுந்ததால்தான் நாட்டில் வெங்காயம் விலை ஏறி விட்டதா? அதோடு எனக்கு கூட கல்வியாளர்கள் மற்றும் அறிவு சார்ந்தோரை பார்த்தால் வணங்க வேண்டும் என்று தோன்றும். அது என்னுடைய விருப்பம். அதோடு புத்தகங்கள் படிப்பதிலும் பாட்டு கேட்பதிலும் விருப்பம் உண்டு. இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விஷயத்தில் விருப்பம் உண்டு. அதனால் ரஜினி செய்யும் விஷயங்களை வைத்து அவரை விமர்சிக்க கூடாது. எப்படி பார்த்தாலும் தமிழ்நாட்டின் பெருமை ரஜினி.

73 வயதிலும் 150 கோடி சம்பளம் வாங்கி வரும் ஒரு மிகப்பெரிய நடிகன். அவர் நினைத்திருந்தால் வேறு மொழிகளில் கூட நடித்து பெரிய ஆளாகி இருக்கலாம். ஆனால் தன்னை வளர்த்த தமிழ் சினிமாவை மறக்காமல் முழு நேர தமிழ் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டார். அது மட்டுமின்றி, யோகி ஆதித்யநாத் மற்றும் ரஜினி இடையே நட்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது. காரணம் ரஜினி உடன் நட்பு வைக்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். அதோடு அவர், சன்னியாசி, யோகிகளை பார்த்தால் நான் வணங்குவேன் என்று தனது நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். இது அவரது விருப்பம். அதனால் இதை எல்லாம் வைத்து அவரை யாரும் விமர்சிக்க கூடாது என்று கூறியிருக்கிறார் சீமான்.

சீமான் இப்படி பேசிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‛‛இப்போது தான் வீடியோவை பார்த்தேன். அண்ணன் சீமானுக்கு மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் ரஜினியை விமர்சித்த போது நானும் உங்களை விமர்சித்தேன். ஆனால் இப்போது அன்பாக பேசி உள்ளீர்கள். அதே அன்போடு உங்களை விரைவில் வந்து சந்திக்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி சீமான் அண்ணா'' என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
68வது படத்தில் அப்பா - மகனாக நடிக்கும் விஜய்68வது படத்தில் அப்பா - மகனாக நடிக்கும் ... லியோ படத்திற்கு 17 தீம்  மியூசிக் கம்போஸ் செய்த அனிருத் லியோ படத்திற்கு 17 தீம் மியூசிக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Girija - Chennai,இந்தியா
30 ஆக, 2023 - 19:48 Report Abuse
Girija இப்போ சூட்கேஸ் வந்துடுச்சுன்னே , அதான் கூவினேன் , வருங்கால ஜனாதிபதி ..............
Rate this:
KC Arun - Tirunelveli,இந்தியா
29 ஆக, 2023 - 17:45 Report Abuse
KC Arun சீமான் அவர்களின் கருத்தும் உவமையும் அருமை என்பதை விட உண்மை என கூறலாம். இதே கருத்தை நான் ஏற்கனவே இங்கு மலரிலேயே கூறியிருக்கிறேன். அவர் ஒரு தனி மனிதர். அவர் விருப்பு வெறுப்புகளில் மற்றவர் தலையீடு தவறு. அடுத்தவர் விருப்பு வெறுப்பை குறை சொல்ல வேண்டுமானால் இவ்வுலகில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். ஏன் எனில் குறை இல்லா மனிதனும் இல்லை மனமும் இல்லை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in