'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
ஸ்ரீவிநாயகா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் "பாதகன்". ஆர்.சதீஷ் ராஜா நாயகனாக நடித்து தயாரிக்கும் இதில் அம்சரேகா, பிரியாஸ்ரீ, ராஜசேகர், கராத்தே ராஜா, குல்ஷன், முத்துக்காளை, போண்டாமணி, ராஜாராம், கே.வி. மணிகண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ரவிகிரண் இசையமைக்கிறார்.
படம் பற்றி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சி.தண்டபானி கூறும்போது, "இயற்கை வளங்களை கொள்ளை அடித்து தான் மட்டுமே வாழ்வதற்கான செயல்களை வில்லன் திட்டம் போட்டு செய்து வருகிறான். இதை கண்டுபிடித்த கதாநாயகனும் , கதாநாயகியும் ஊர்மக்களிடமும், காவல்துறையிடமும் எடுத்து சொல்ல முற்படுகின்றனர். இதனால் அவர்கள் இருவரும் வில்லனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். முடிவில் வில்லன் என்ன செய்தான் என்பதை மிகவும் திரில்லாகவும், மக்கள் அதிர்ச்சியோடு பார்க்கும் வகையிலும் இதில் சொல்லி இருக்கிறேன்" என்கிறார்.