கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் |

திறமைகள் பல இருந்தும் அதிகம் பேசப்படாத நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். இசையமைப்பது, பாடுவது, நடிப்பது என அப்பா கமல்ஹாசனைப் போலவே பன்முகத் திறமை கொண்டவர். அவரது திறமையை இந்தியத் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தது.
'சலார்' படத்தின் மூலம் அந்தக் குறை தீரும் என எதிர்பார்க்கலாம். பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வந்த போதே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். பல வருடங்களாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்காத நடிகையாக ஸ்ருதி இருந்ததே அதற்குக் காரணம்.
'சலார்' படத்தில் ஸ்ருதியின் திறமைகளை இயக்குனர் பிரசாந்த் நீல் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்பதற்கு ஒரு உதாரணத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி. ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள அப்படத்திற்காக அந்த ஐந்து மொழிகளிலும் அவரே சொந்தக் குரலில் டப்பிங் பேசி வருகிறார். மூன்று மொழிகளில் டப்பிங் பேசி முடித்துவிட்டாராம், இன்னும் இரண்டு மொழிகளில் பேச வேண்டுமாம். இந்த ஒரு திறமைக்காகவே ஸ்ருதிக்கு ஒரு தேசிய விருது வழங்கலாம். நோட் பண்ணிக்குங்க ஜுரிஸ்….