'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள கிங் ஆப் கொத்தா என்கிற திரைப்படம் பான் இந்திய ரிலீஸ் ஆக நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் வில்லனாக சார்பட்டா பரம்பரை புகழ் டான்சிங் ரோஸ் சபீர் கல்லரக்கல், நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ், நடிகர் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சபீர் கல்லரக்கல் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி இருவரும் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது சபீர் கல்லரக்கல் முதன் முதலாக துல்கர் சல்மானை சந்தித்தபோது தான் ஒரு நட்சத்திர நடிகர் என்றோ பெரிய குடும்பத்து வாரிசு என்றோ ஒரு துளி கூட காட்டிக் கொள்ளவில்லை. பார்த்த உடனேயே கதை பற்றி பேச ஆரம்பித்த அவர் இப்படி ஒரு வசனம் உங்களுக்கு இருக்கிறது சரியாக வருமா, நான் இப்படி பேச போகிறேன், இது உங்களுக்கு செட் ஆகுமா என ஒரு சக நடிகராகவே பேச ஆரம்பித்து விட்டார். முதல் நாளில் இருந்தே அவருடன் ஈசியாக என்னால் பயணிக்க முடிந்தது என்று கூறினார்.
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியும் துல்கர் சல்மானின் இந்த எளிமையை வியந்து பாராட்டியதுடன் பேசாமல் இனிமேல் அவருக்கு துல்கர் ஈஸி சல்மான் என பெயர் வைத்து விடலாம் என்று ஜாலியாக குறிப்பிட்டார்.