ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் |
பத்து தல படத்தை அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதோடு, இதுவரை சிம்பு நடித்த படங்களில் இந்த படம் அதிகப்படியான பட்ஜெட்டில் தயாராக உள்ளது.
தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மேலும், இதற்கு முன்பு சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற ஐந்து படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஆறாவது முறையாக இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.