மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து 2015ல் வெளிவந்த படம் 'வேதாளம்'. அஜித்தின் திரையுலக வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் அந்தப் படமும் ஒன்று. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தன. அஜித்தின் நடிப்பு, திரைக்கதையில் திருப்புமுனைகள், தங்கை கதாபாத்திரம், பிளாஷ்பேக் காட்சிகள் என எத்தனையோ சொல்லலாம்.
அந்தப் படத்தைத் தெலுங்கு ரசிகர்களும் ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரீமேக் செய்ய விரும்பி நடித்தார் சிரஞ்சீவி. மெஹர் ரமேஷ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தமிழில் இருந்த பல முக்கியமான விஷயங்களை தெலுங்கில் மாற்றியதுதான் படத்தின் தோல்விக்குக் காரணம் என தெலுங்கு விமர்சகர்களே குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சிரஞ்சீவியின் ஹீரோயிசம், தங்கை கதாபாத்திரத்தில் எடுபடாத கீர்த்தி சுரேஷ் என சில விஷயங்கள் படத்தின் வெற்றியைக் குலைத்திருக்கின்றன. தமிழில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'அண்ணாத்த' படம் தோல்வியடைந்தது. அது போல தெலுங்கில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'போலா சங்கர்' படமும் தோல்வியடைந்துள்ளது.
சிரஞ்சீவி மீண்டும் நடிக்க வந்த பிறகு அவர் நடித்த நேரடித் தெலுங்குப் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் ஓரளவாவது வரவேற்பு தந்தார்கள். அதே சமயம் அவர் நடித்த ரீமேக் படங்களான 'காட்பாதர், போலா சங்கர்' ஆகியவற்றிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. ரீமேக் படங்களில் மீண்டும் நடிப்பதை சிரஞ்சீவி 'ரீதிங்க்' செய்ய வேண்டும் என பெரும்பாலான விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.