அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது முழுநேர அரசியல்வாதியாக இருப்பவர் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சார விவகாரங்கள், இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
சித்தூர் மாவட்டம் நகரி புறநகர் மண்டலம் டி.ஆர்.கண்ட்ரிகா கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேசம்மா கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆடி மாத விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பட்டு வஸ்திரங்களை ரோஜா சமர்ப்பித்தார். தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். மேலும் கோயிலில் பக்தர்களுக்கு அம்மனின் ஆடி மாதக் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அம்மனை தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவுடன் அவரது சகோதரர்கள் ஒய்.ராம்பிரசாத் ரெட்டி, கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோயிலில் வேத பண்டிதர்கள் பூர்ணகும்பத்துடன் அமைச்சருக்கு வரவேற்பு அளித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.