தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது முழுநேர அரசியல்வாதியாக இருப்பவர் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சார விவகாரங்கள், இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
சித்தூர் மாவட்டம் நகரி புறநகர் மண்டலம் டி.ஆர்.கண்ட்ரிகா கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேசம்மா கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆடி மாத விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பட்டு வஸ்திரங்களை ரோஜா சமர்ப்பித்தார். தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். மேலும் கோயிலில் பக்தர்களுக்கு அம்மனின் ஆடி மாதக் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அம்மனை தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவுடன் அவரது சகோதரர்கள் ஒய்.ராம்பிரசாத் ரெட்டி, கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோயிலில் வேத பண்டிதர்கள் பூர்ணகும்பத்துடன் அமைச்சருக்கு வரவேற்பு அளித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.