சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கடந்த 2014ல் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற திரைப்படம் வெளியானது. ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா இயக்கிய இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டது. தீபிகா படுகோனே, சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி பினிஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படம் வெளியான பின்பு வியாபராம் தொடர்பான சில கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் எழுந்து, அதன் பிறகு அமுங்குவது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் இந்த படத்தின் அனிமேஷன் பணிகளை கவனித்த நிறுவனத்திற்கு பட உரிமையில் 20 சதவீதமும், 12 சதவீத கமிஷன் தொகையும் அளிப்பதாக கூறி 5 கோடி ரூபாய்க்கான காசோலையை 2014ல் வழங்கி உள்ளார். ஆனால் அப்படி அளிக்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், முரளி மனோகர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கில் முரளி மனோகருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது கீழமை நீதிமன்றம்.