இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

கடந்த 2014ல் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற திரைப்படம் வெளியானது. ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா இயக்கிய இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டது. தீபிகா படுகோனே, சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி பினிஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படம் வெளியான பின்பு வியாபராம் தொடர்பான சில கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் எழுந்து, அதன் பிறகு அமுங்குவது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் இந்த படத்தின் அனிமேஷன் பணிகளை கவனித்த நிறுவனத்திற்கு பட உரிமையில் 20 சதவீதமும், 12 சதவீத கமிஷன் தொகையும் அளிப்பதாக கூறி 5 கோடி ரூபாய்க்கான காசோலையை 2014ல் வழங்கி உள்ளார். ஆனால் அப்படி அளிக்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், முரளி மனோகர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கில் முரளி மனோகருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது கீழமை நீதிமன்றம்.