கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் |
இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி தயாரித்த வெப் தொடர் 'சுழல்' . பிரம்மா மற்றும் அனுசரன் முருகையன் இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது. இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெண் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாலேயே எந்த அளவுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்கிற கதையை கோவில் திருவிழாக்களில் நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சியோடு இணைத்து திகில் தொடராக தந்திருந்தார்கள்.
இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படும் என்று புஷ்கர், காயத்ரி கூறியுள்ளனர். இரண்டாம் பாகத்துக்கான முதல்கட்ட பணி தொடங்கி உள்ளது. ஸ்கிரிப்ட் பணிகளும், லொக்கேஷன் தேர்வு பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக அவர்கள் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.