ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி |

'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளரான கீரவாணி தற்போது தமிழில் 'சந்திரமுகி 2' படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழில் மரகதமணி என்ற பெயரில் “அழகன், நீ பாதி நான் பாதி, சிவந்த மலர், சேவகன், வானமே எல்லை, ஜாதி மல்லி, கொண்டாட்டம், பிரதாப், ஸ்டூடன்ட் நம்பர் 1” ஆகிய படங்களுக்கு இசையமைத்துளளார்.
ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இசையமைக்கும் 'சந்திரமுகி 2' படம் பற்றிய அப்டேட் ஒன்றை நேற்று கொடுத்துள்ளார்.“சந்திரமுகி 2' திரைப்படத்தைப் பார்த்தேன். இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றனர். என் முயற்சியால் மனதைக் கவரும் காட்சிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக இரவு பகலாக தூக்கமில்லாமல் உயிரைக் கொடுத்துள்ளேன். குரு கிரண், எனது நண்பர் வித்யாசாகர் ஆகியோருக்கு எனக்கு வாழ்த்து சொல்லுங்கள்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பி. வாசு இயக்கத்தில் 2004ல் கன்னடத்தில் வெளியான 'ஆப்தமித்ரா' திரைப்படம்தான் பின்னர் தமிழில் 2005ல் 'சந்திரமுகி' யாக வெளிவந்தது. 'ஆப்தமித்ரா' படத்திற்கு குருகிரண், 'சந்திரமுகி' படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தனர். அந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் இசையமைப்பாளர்களது பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய காரணமாக அமைந்தது.