ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன். இவர் தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், அதில் விட்டதை இந்த ஜெயிலரில் பிடித்து விட வேண்டும் என்று ஒரு அதிரடியான கதையுடன் களம் இறங்கி இருக்கிறார் நெல்சன். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் சிலை கடத்தலை மையமாக கொண்ட கதையை திரைக்கதை அமைத்திருக்கிறார் நெல்சன். சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய புள்ளி ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறையில் அடைக்கப்படுகிறார். அதையடுத்து அவனை மீட்பதற்காக ஒரு கும்பல் களமிறங்குகிறது. அப்போது ரஜினிக்கும், அவர்களுக்கும் இடையே நடப்பது தான் இந்த ஜெயிலர் படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது.