''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
நடிகை சாய் பல்லவியை பொறுத்தவரை அது எவ்வளவு பெரிய நடிகர்கள் படம் என்றாலும் தனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கனமான கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறார். இதனால் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருக்கும் சாய்பல்லவி படப்பிடிப்பு இல்லாத நாட்களை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். குறிப்பாக ஆன்மிகத்தில் நாட்டம் உள்ள சாய்பல்லவி சமீபத்தில் அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று வந்துள்ளார் சாய்பல்லவி. உடன் அவரது பெற்றோரும் இந்த யாத்திரையில் பங்கெடுத்துள்ளனர்.
இந்த பயணம் மேற்கொண்டது குறித்து சிலிர்க்கும் சாய்பல்லவி, வயதான தன் பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு இந்த புனித யாத்திரையை மேற்கொண்டபோது அவர்களுக்கு ஏற்பட்ட மூச்சிரைப்பு, நெஞ்சு வலி, பனிப்பொழிவினால் ஏற்பட்ட சறுக்கல்கள் இவற்றையெல்லாம் நேரிட்டபோது கடவுளை நோக்கி எதற்காக இவ்வளவு தூரத்தில் இருக்கிறாய் என்று கேள்வி எழுப்பத் தோன்றியது என்று கூறியுள்ளார்.
அதே சமயம் நாங்கள் நல்லபடியாக தரிசனம் செய்து திரும்பி வந்தபோது பல பேர் தங்களது பயணத்தை முழுவதுமாக தொடர முடியாமல் பாதியிலேயே முடித்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. அப்போதுதான் என்னுடைய கேள்விக்கான விடையும் கிடைத்தது என்று இந்த பயணம் குறித்து சற்று விரிவாகவே சிலாகித்துக் கூறியுள்ளார் சாய்பல்லவி.