பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார். இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பிறகு சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். என்றாலும் ஒரு ஹீரோயினாக நிலையான ஒரு இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தனது குத்துச் சண்டை பயிற்சியை மீண்டும் தொடங்கிய ரித்திகா கூடுதலாக கராத்தே பயிற்சியும் பெற்று வந்தார். தற்போது கராத்தே பயிற்சியில் முக்கியமான நிலையான பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். அவருடன் அவரது தந்தையும் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.