‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமானவர் அந்தோனிதாசன். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அந்தோணிதாசன் மனைவியின் தங்கை தான் சூப்பர் சிங்கர் பிரபலமலான ராஜலெட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அந்தோணிதாசன், ‛‛இந்த காலத்தில் பாடல்களை எழுதிய பாடகர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. பாடுகிறவர்களும் இந்த பாடலை எழுதியவர்கள் இன்னார் தான் எழுதினார்என்று சொல்வதில்லை. எங்களுடைய அடையாளங்களை வாங்கி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
என் மனைவி எழுதிய பாடலை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலெட்சுமி பாடியுள்ளனர். அந்த பாடல் பாடியதன் மூலம் பாராட்டுகளையும் புகழையும் பெற்ற ராஜலெட்சுமி எந்த இடத்திலும் அந்த பாடலை எழுதியது தனது சகோதரி தான் என்று கூறவில்லை. இதனால், அந்த பாடலே செந்தில் - ராஜலெட்சுமியுடையது என்றாகிவிட்டது என்று வருத்தத்துடன் பேசி உள்ளார்.




