ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமானவர் அந்தோனிதாசன். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அந்தோணிதாசன் மனைவியின் தங்கை தான் சூப்பர் சிங்கர் பிரபலமலான ராஜலெட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அந்தோணிதாசன், ‛‛இந்த காலத்தில் பாடல்களை எழுதிய பாடகர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. பாடுகிறவர்களும் இந்த பாடலை எழுதியவர்கள் இன்னார் தான் எழுதினார்என்று சொல்வதில்லை. எங்களுடைய அடையாளங்களை வாங்கி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
என் மனைவி எழுதிய பாடலை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலெட்சுமி பாடியுள்ளனர். அந்த பாடல் பாடியதன் மூலம் பாராட்டுகளையும் புகழையும் பெற்ற ராஜலெட்சுமி எந்த இடத்திலும் அந்த பாடலை எழுதியது தனது சகோதரி தான் என்று கூறவில்லை. இதனால், அந்த பாடலே செந்தில் - ராஜலெட்சுமியுடையது என்றாகிவிட்டது என்று வருத்தத்துடன் பேசி உள்ளார்.