‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து வெளிவந்து 1000 கோடி வசூலைக் கடந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என படத்தின் கதாசிரியரும், ராஜமவுலியின் அப்பாவுமான விஜயேந்திர பிரசாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதே சமயம், அப்படத்தை ராஜமவுலி இயக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க உள்ளார். அதற்கடுத்து 'மகாபாரதம்' படத்தை ஆரம்பிக்கப் போகிறார். அது மூன்று பாகங்கள் கூட உருவாகலாம் என அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் விஜயேந்திர பிரசாத். அதனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா இயக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இரண்டாவது யூனிட் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் கார்த்திகேயா. படத்தின் சில முக்கிய காட்சிகளை அவர் படமாக்கியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போதுதான் இயக்குனர் யார் என்பது தெரிய வரும். அதுவரை பலரது பெயர்கள் அதில் அடிபடலாம்.