ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராணா. தொடர்ந்து ஹீரோவாக மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் அவர் வெப்சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திருப்பி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரும் நடிகர் வெங்கடேஷும் இணைந்து நடித்த ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸ் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ராணா ஒரு தயாரிப்பாளராக மாறி 'மாயா பஜார் பார் சேல்' என்கிற வெப்சீரிஸை தயாரித்துள்ளார்.
கவுதமி சல்குல்லா என்பவர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் நடிகர்கள் நவ்தீப், நரேஷ், ஈஷா ரெப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகரின் முக்கியமான பகுதியில் உள்ள ஒரு புதிதாக கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், திடீரென அரசாங்கம் அந்த அபார்ட்மெண்ட் முறையாக அனுமதியுடன் கட்டப்படவில்லை என கூறி அவற்றை அப்புறப்படுத்த முயற்சிப்பதால் அதிர்ச்சி அடைகின்றனர். இதற்காக அவர்கள் கையில் எடுக்கும் போராட்டம் தான் இந்த வெப் சீரிஸின் முழுக்கதை. வரும் ஜூலை 14-ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது.