படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழும் சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்குகளை திரைப்பட நட்சத்திரங்கள் தத்தெடுத்துள்ளனர். கார்த்தி, விஜய்சேதுபதி ஆகியோர் சமீபத்தில் புலி மற்றும் சிங்கத்தை தத்தெத்தார்கள். சிவார்த்திகேயன் அனு என்ற வெள்ளை புலியையும், விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும ஏற்கெனவே தத்தெடுத்தார். தற்போது 3 வயது ஷேரு என்ற ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.
இது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் “வண்டலூர் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80 ஜிக்கான ரசீது மற்றும் பூங்காவை இலவசமாக சுற்றிப்பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.