வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

உதயநிதி ஸ்டாலின் நடித்து கடைசியாக வெளிவந்த கண்ணை நம்பாதே படம் தோல்வியை தழுவியது. தற்போது அமைச்சர் ஆன பிறகு தனது கடைசி படமாக மாமன்னன் படத்தை அறிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் நெட்டிசன்கள் சிலர் இந்த படம் சாதி குறித்து பேசுவதாக விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் உதயநிதி அளித்த ஒரு பேட்டியில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அதன்படி, "மாமன்னன் சாதி பெருமை பேசும் படம் இல்லை சாதி மறுப்புதான் பேசி இருக்கிறது. எந்த சாதியினரையும் அவமதிக்கும் காட்சிகளும் படத்தில் இல்லை. குறிப்பாக யாரையும் தாக்கவும் இல்லை. ஒவ்வொரு பக்கத்திலும் நியாயம் இருக்கும். அதேபோல் எதிர் விஷயங்களும் இருக்கும். அதற்கு படத்தில் விளக்கம் இருக்கிறது. மாமன்னன் படத்தில் வடிவேலு தான் ஹீரோ. அவர் பெயர்தான் முதலில் வரும். இது அரசியல் பின்புலம் கொண்ட கதையென்பதால் நான் நடிக்கும் கடைசி படமாக இப்படம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் அதனால் தான் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் ஆன நிலையில் அந்த படத்தில் இருந்து விலகினேன் '' என்று தெரிவித்துள்ளார்.




