சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பொருள் விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது. தெலுங்கில் 'கபாலி' படத்தை வெளியிட்ட கேபி சவுத்ரி என்ற தயாரிப்பாளர் பத்து நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கு அவர் போதைப் பொருட்களை சப்ளை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தெலுங்கில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் சுரேகா வாணி அவரது மகள் மற்றும் சில நடிகைகள், கேபி சௌத்ரியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. தெலுங்கில் பல படங்களில் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. தமிழில் 'விஸ்வாசம், மெர்சல், ஜில்லா, உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கேபி சௌத்ரி சர்ச்சையில் தனது பெயர் சிக்கியிருப்பது குறித்து சுரேகா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “சமீபத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகளால் எனது தொழில் எனது எதிர்காலம், எனது குடும்பம், எனது குழந்தைகளின் எதிர்காலம், உடல் நலம் அனைத்தும் பாதிக்கப்படும். தயவு செய்து எங்களைப் புரிந்து கொள்ளுங்கள், இந்த சர்ச்சையில் எங்களை இழுக்க வேண்டாம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.