பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
நடிகர் சதீஷ் ‛வித்தைக்காரன்' படத்தில் நடிப்பதற்காக கோவை சென்றார். கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: படிக்கும்போது எந்த விதமான தவறான விஷயத்திலும் ஈடுபட வேண்டாம். மது, புகைபழக்கம் உள்ளிட்டவை உடல்நலத்தை கெடுப்பதோடு, கல்வியையும் கெடுக்கும். ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்; நாங்கள் படிக்கும்போது ஆசிரியருக்கு பயப்படுவோம், இப்போது உள்டாவாக மாறிவிட்டது. நிறைய வீடியோக்களில் மாணவர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதை பார்க்கும் போது வேதனையளிக்கிறது.
நாய்சேகர் படத்திற்கு பிறகு ‛சட்டம் என் கையில்' என்ற படத்தை முடித்துள்ளோம்; அது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனர் வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படம் அடுத்த வெளியீடாக இருக்கும். அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கிறது, நல்ல தொழிலாகவும் இருக்கிறது. தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும்.
திரைபட்டங்களில் உள்ள விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். தேவர் மகன் திரைப்படம் தனக்கு மிகவும் படித்த படம் , இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கடா என்ற நல்ல கருத்தை மட்டும் அதில் நான் எடுத்துக்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.