ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வருகிற 29ம் தேதி படம் வெளிவருகிறது. இதுதான் என் கடைசி படம் என்று அறிவித்த உதயநிதி, இதுதான் எனது கடைசி சினிமா பேட்டி என்று அறிவித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைப் பார்த்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது நிறைவேறி விட்டது. மிஷ்கின், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அதுவும் நிறைவேறியது.
'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடிக்கும்போது, 'மாமன்னன்' எனது கடைசி படம் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்போதும் உறுதியாக இருக்கிறேன். முதலில் நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்றேன். பிறகு வந்தேன். அடுத்து, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். ஆனால், அரசியலுக்கு வந்து அமைச்சராகவும் ஆகிவிட்டேன். இப்போது என் முன்பு மக்களுக்கான பணிகள் நிறைய காத்திருக்கிறது. அவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும்.
கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நான் நடிப்பதாகவும் வெற்றிமாறன் திரைக்கதை எழுதுவதாகவும் இருந்தது. நான் அமைச்சரானவுடனே கமலிடம் இப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று சொன்னேன். 'அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். திரைப்பணியை விட, மக்கள் பணி மகத்தானது. இந்தக்கதை உங்களுக்காக காத்திருக்கும்” என்று சொல்லி என்னை வாழ்த்தினார்.
'மாமன்னன்' படத்தில் வடிவேலுதான் மாமன்னன், நான் சாதாரண மன்னன். இந்த படம் மாரி செல்வராஜின் அரசியலை பேசுகிறது. நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படமாக எனக்கு பிடித்த படமாக மாமன்னன் இருக்கும். என்றார்.




