முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வருகிற 29ம் தேதி படம் வெளிவருகிறது. இதுதான் என் கடைசி படம் என்று அறிவித்த உதயநிதி, இதுதான் எனது கடைசி சினிமா பேட்டி என்று அறிவித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைப் பார்த்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது நிறைவேறி விட்டது. மிஷ்கின், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அதுவும் நிறைவேறியது.
'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடிக்கும்போது, 'மாமன்னன்' எனது கடைசி படம் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்போதும் உறுதியாக இருக்கிறேன். முதலில் நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்றேன். பிறகு வந்தேன். அடுத்து, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். ஆனால், அரசியலுக்கு வந்து அமைச்சராகவும் ஆகிவிட்டேன். இப்போது என் முன்பு மக்களுக்கான பணிகள் நிறைய காத்திருக்கிறது. அவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும்.
கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நான் நடிப்பதாகவும் வெற்றிமாறன் திரைக்கதை எழுதுவதாகவும் இருந்தது. நான் அமைச்சரானவுடனே கமலிடம் இப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று சொன்னேன். 'அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். திரைப்பணியை விட, மக்கள் பணி மகத்தானது. இந்தக்கதை உங்களுக்காக காத்திருக்கும்” என்று சொல்லி என்னை வாழ்த்தினார்.
'மாமன்னன்' படத்தில் வடிவேலுதான் மாமன்னன், நான் சாதாரண மன்னன். இந்த படம் மாரி செல்வராஜின் அரசியலை பேசுகிறது. நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படமாக எனக்கு பிடித்த படமாக மாமன்னன் இருக்கும். என்றார்.