கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் 1990 காலகட்ட கதையில் உருவாகி வருகிறது. கே ஜி எப் உருவாவதற்கு முன்பே அந்த கேஜிஎப் நிலத்தில் தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றிய கதையில் தங்கலான் உருவாகிறது. குறிப்பாக, பழங்குடியின மக்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தை இந்த படம் சொல்லப்போகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் நடித்து வரும் பார்வதி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ‛காதல், பணம், புகழைத் தவிர எனக்கு உண்மையை தாருங்கள். தங்கலான் படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக சென்ற இடங்கள், நான் தேர்ந்தெடுத்த விஷயங்கள் அனைத்தும் எனக்குள் எழுப்பி வைத்திருந்த சுவர், முகத்திரைகளை சுக்கு நூறாக உடைத்துள்ளது. கடைசியில் உண்மை மட்டுமே பிரதிபலித்தது. இந்த தங்கலான் எனது கேரியரில் மிக முக்கியமான திருப்பத்தை கொடுக்கக்கூடிய படமாக அமைந்துள்ளது' என்று பதிவிட்டு இருக்கிறார் பார்வதி.