22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆதி புருஷ் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியான சமயத்தில் இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் சர்ச்சையை எழுப்பின.
அதேசமயம் பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் நடிகர் பிரபாஸுக்கு ரசிகர் வட்டம் பெருகி உள்ளது. அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த ரசிகை ஒருவர் ஆதி புருஷ் படம் பார்ப்பதற்காக டோக்கியோவில் இருந்து கிட்டத்தட்ட 5,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து சிங்கப்பூருக்கு வந்து ஆதி புருஷ் படத்தை பார்த்துள்ளார்.
அந்த படம் பார்க்கும்போது தன் கையில் இருந்த ஆதி புருஷ் படத்தின் சிறிய போஸ்டர் ஒன்றை காண்பித்தபடி, தான் கற்றுக் கொண்ட தெலுங்கு மொழியிலேயே தான் பிரபாஸின் மிக தீவிரமான ரசிகை என்று பேசி ஆச்சரியப்படவும் வைத்தார் அந்த ரசிகை. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.