ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆதி புருஷ் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியான சமயத்தில் இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் சர்ச்சையை எழுப்பின.
அதேசமயம் பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் நடிகர் பிரபாஸுக்கு ரசிகர் வட்டம் பெருகி உள்ளது. அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த ரசிகை ஒருவர் ஆதி புருஷ் படம் பார்ப்பதற்காக டோக்கியோவில் இருந்து கிட்டத்தட்ட 5,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து சிங்கப்பூருக்கு வந்து ஆதி புருஷ் படத்தை பார்த்துள்ளார்.
அந்த படம் பார்க்கும்போது தன் கையில் இருந்த ஆதி புருஷ் படத்தின் சிறிய போஸ்டர் ஒன்றை காண்பித்தபடி, தான் கற்றுக் கொண்ட தெலுங்கு மொழியிலேயே தான் பிரபாஸின் மிக தீவிரமான ரசிகை என்று பேசி ஆச்சரியப்படவும் வைத்தார் அந்த ரசிகை. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.