நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த 2017ம் ஆண்டு போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போதைப் பொருட்களை சப்ளை செய்ததாகவும், அதைப் பயன்படுத்தியதாகவும் 15க்கும் மேற்பட்ட பிரபலங்கள் போதைப் பொருள் தடுப்புப் புரிவின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் சிக்கினர். அதைத் தொடர்ந்து சில சினிமா பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.
அதைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, நடிகர் ராணா டகுபட்டி, சுப்பராஜு, தருண், நவ்தீப், நடிகை சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் விசாரணை செய்யப்பட்டனர். அந்த போதைப் பொருள் விவகார வழக்கே இன்னும் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் மீண்டும் ஒரு விவகாரம் பத்து நாட்களுக்கு முன்பு வெடித்தது.
ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தைத் தெலுங்கில் வெளியிட்ட தயாரிப்பாளர் கேபி சவுத்ரி என்கிற சுங்கர கிருஷ்ணபிரசாத் சவுத்ரி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 82 கிராம் போதைப் பொருட்களும் கார், போன் உள்ளிட்ட 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவருடைய தொலைபேசி அழைப்புகளைப் பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆகியோரிடம் அவர் அடிக்கடி பேசியது தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிடாமல் அது பற்றி விசாரணையை காவல் துறை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, தெலுங்கு பிக் பாஸ் பிரபலம் ஒருவர், அம்மா - மகள் நடிகைகள் என சிலரது பெயர்கள் டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
2017 போதைப் பொருள் விவகாரம் போல இந்த 2023 போதைப் பொருள் விவகாரமும் பெரிய அளவில் இருக்கலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.