ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த 2017ம் ஆண்டு போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போதைப் பொருட்களை சப்ளை செய்ததாகவும், அதைப் பயன்படுத்தியதாகவும் 15க்கும் மேற்பட்ட பிரபலங்கள் போதைப் பொருள் தடுப்புப் புரிவின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் சிக்கினர். அதைத் தொடர்ந்து சில சினிமா பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.
அதைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, நடிகர் ராணா டகுபட்டி, சுப்பராஜு, தருண், நவ்தீப், நடிகை சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் விசாரணை செய்யப்பட்டனர். அந்த போதைப் பொருள் விவகார வழக்கே இன்னும் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் மீண்டும் ஒரு விவகாரம் பத்து நாட்களுக்கு முன்பு வெடித்தது.
ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தைத் தெலுங்கில் வெளியிட்ட தயாரிப்பாளர் கேபி சவுத்ரி என்கிற சுங்கர கிருஷ்ணபிரசாத் சவுத்ரி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 82 கிராம் போதைப் பொருட்களும் கார், போன் உள்ளிட்ட 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவருடைய தொலைபேசி அழைப்புகளைப் பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆகியோரிடம் அவர் அடிக்கடி பேசியது தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிடாமல் அது பற்றி விசாரணையை காவல் துறை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, தெலுங்கு பிக் பாஸ் பிரபலம் ஒருவர், அம்மா - மகள் நடிகைகள் என சிலரது பெயர்கள் டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
2017 போதைப் பொருள் விவகாரம் போல இந்த 2023 போதைப் பொருள் விவகாரமும் பெரிய அளவில் இருக்கலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.