ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் | அருண் விஜய், முத்தையா கூட்டணியில் புதிய படம் | சிரஞ்சீவி படத்தின் முதல் நாள் வசூல் 84 கோடி | நான் நிறைய கதைகள் எழுதி வருகிறேன் : நடிகர் சூரி | சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங்கிற்கு தடை : விஜய் தேவரகொண்டாவின் வருத்தமும், சந்தோஷமும் | 'சர்வம் மாயா' வெற்றியால் தூசு தட்டப்படும் நிவின்பாலியின் பேபி கேர்ள்' | டைகர் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பட்டம் வென்ற பவன் கல்யாண் | ராம்சரண் படத்தால் இயக்குனர் சுகுமாருக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகிறது : ராஜமவுலி ஆருடம் | ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்பட்ட சில காட்சிகள் ராஜா சாப் படத்தில் சேர்ப்பு | காசிக்கு போனேன் கரு கிடைத்தது : மோகன் ஜி |

கன்னடத்தில் கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றி படங்களாக மாற்றி முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளார். இதற்கிடையே தெலுங்கில் உருவாகும் ஒரு படத்திற்கு கதை மட்டும் எழுத இருக்கிறார் பிரசாந்த் நீல்.
சலார் படத்தை தெலுங்கில் தயாரித்து வரும் கேஜிஎப் பட தயாரிப்பாளரான விஜய் கிரஹந்தூர், தெலுங்கில் இன்னொரு படத்தையும் தயாரிக்கிறார். கவி ரெட்டி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகனாக அவருடைய உறவினர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா என்பவர் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தான் இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுதுகிறார். தன்னை கேஜிஎப் படம் மூலம் கைதூக்கி விட்ட தயாரிப்பாளருக்கு நன்றி கடனாக இதை செய்கிறார் பிரசாந்த் நீல்.