கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது |

மலையாள நடிகர்கள் பெரும்பாலும் தமிழில் நடித்து விடுவார்கள். பிரேம் நசீர் காலத்தில் இருந்து பகத் பாசில் வரை அது தொடர்கிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் நிகில். இவர் மோகன்லாலின் தங்கை மகன். இவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த புதுமுகம் நேத்ரா ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர், வின்சென்ட் அசோகன், சுப்பு, சங்கீதா, மாறன், சுவாமிநாதன், தனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். தொட்டி ஜெயா, சக்கரைகட்டி, என்னமோ நடக்குது உள்பட பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜூட் ரோமரிக் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
படம் பற்றி இயக்குனர் ஜூட் ரோமரிக் கூறியதாவது: மலையாளத்தில் நிகில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இதுதான் முதல் படம். வாழ்கையில் சில நேரங்களில் நடக்கும் விஷயம் நம்மை பயப்படுத்தி தவறான முடிவு எடுக்க தூண்டும். ஆனால் சற்றே சிந்தித்தால், என்ன நடந்தது என்பதற்கும், என்ன நடக்கிறது என்பதற்கும் சம்பந்தமே இருக்காது. கதையின் நாயகன் வாழ்வில் நடக்கும் இப்படி ஒரு சம்பவத்தை நகைச்சுவை கலந்த அழகான காதல் கதையாக கூறும் படமாக உருவாகிறது. என்றார்.