26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

தமிழில் 'கிழக்கே போகும் ரெயில்' படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சுதாகர். இனிக்கும் இளமை, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், ஆயிரம் வாசல் இதயம், கல்லுக்குள் ஈரம், உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2018ம் ஆண்டு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்தார். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 64 வயதாகும் சுதாகர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையர் தினத்தையொட்டி ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் தனது மகனுடன் பங்கேற்று கேக் வெட்டினார். அப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருந்தார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் “பாரதிராஜாவின் அறிமுகத்தால் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா ஜோடியாக நடித்தேன். அதன்பிறகும் ஏராளமான படங்களில் நடித்தேன். பிறகு தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் ஆந்திரா வந்து தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தேன். பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தேன். தமிழகத்தில் எனக்கு இருந்த நிறைய சொத்துகளை விற்று விட்டேன். தற்போது உடல்நல குறைவால் அவதிப்படுகிறேன். ஆனால் சிலர் நான் மரணம் அடைந்து விட்டதாக தவறான வதந்திகளை பரப்பியபோது மிகவும் வருத்தம் அடைந்தேன்'' என்றார்.




