மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
தமிழில் 'கிழக்கே போகும் ரெயில்' படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சுதாகர். இனிக்கும் இளமை, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், ஆயிரம் வாசல் இதயம், கல்லுக்குள் ஈரம், உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2018ம் ஆண்டு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்தார். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 64 வயதாகும் சுதாகர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையர் தினத்தையொட்டி ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் தனது மகனுடன் பங்கேற்று கேக் வெட்டினார். அப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருந்தார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் “பாரதிராஜாவின் அறிமுகத்தால் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா ஜோடியாக நடித்தேன். அதன்பிறகும் ஏராளமான படங்களில் நடித்தேன். பிறகு தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் ஆந்திரா வந்து தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தேன். பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தேன். தமிழகத்தில் எனக்கு இருந்த நிறைய சொத்துகளை விற்று விட்டேன். தற்போது உடல்நல குறைவால் அவதிப்படுகிறேன். ஆனால் சிலர் நான் மரணம் அடைந்து விட்டதாக தவறான வதந்திகளை பரப்பியபோது மிகவும் வருத்தம் அடைந்தேன்'' என்றார்.