25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு | 96 வயது ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய மோகன்லால் | 151-வது படத்தில் சகோதர நடிகர்களுடன் கைகோர்த்த நடிகர் திலீப் | தெலுங்கானாவில் ஸ்டுடியோ அமைக்க அஜய் தேவ்கன் ஆர்வம் | 40 வயது ரன்வீர் சிங் ஜோடி 20 வயது சாரா : ரசிகர்கள் கமெண்ட்ஸ் | இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ் | அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆதிபுருஷ் படத்தை விட அதிகமாகவே இருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, வில்லனாக நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்குமே தனது சொந்த பணத்தில் இருந்து தலா பத்தாயிரம் ரூபாயை அவர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தியுள்ளார் பிரபாஸ். சலார் படக்குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார் பிரபாஸ்.